Sunday 19 April 2020

சற்றே நகுக-இரா முருகன் கட்டுரைகள்



'சற்றே நகுக
இரா முருகன் தினமணிக் கதிர் கட்டுரைகள்

தலைப்புக்கு முழு நியாயம் செய்யும் வகையில் படிக்கும்போது பெரும்பாலும்.புன்னகையை சிரிப்பை அல்லது உள்ளூர 'க்ளுக்' குகளை உண்டாக்கும் கட்டுரைகளே. அலுப்பூட்டும் மேடைத் துணுக்குகள் அல்லது பட்டிமன்ற அசட்டு ஜோக்குகள் போல் இல்லாமல் தனது நீண்ட விரிந்த பயண மற்றும் வாசிப்பு அனுபவத்தை ஒட்டி அமைந்தவை என்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று எதற்கெடுத்தாலும் சிடுமூஞ்சித் தனமும், அலுப்போட்டும் அற்ப விமர்சனங்களும், ம பி விவாதங்களும், அப்படி வெட்டிப் போற்றவற்றை கொலாஜ் போல ஒட்டி மறு உருவாக்கம் கொள்ளும் கீழ்மைகளும் மலிந்த சமயத்தில் ( சமூக ஊடகங்கள் புண்ணியத்தில்) - சற்று மனம் விட்டு புன்னகைக்க வைக்கின்றன இவை.

என்னுடைய ஆசிரியரும் எழுத்தாளருமான வே. சபாநாயகம் ஒரு முறை பேசும்போது நகைச்சுவை எழுதுவது மிகவும் கடினம். அது இயல்பாக வரவேண்டும். எழுதும்போது பரிச்சயமான ஒரு காட்சியை செய்தியை சொல்லி உறுத்தாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்று ஜராசுவின் "அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது" என்பதை குறிப்பிடுவார். இரா முருகனுக்கு அவை கைவந்திருப்பதை இதில் சுவைக்கலாம்.

கட்டுரைத் தொகுப்பில்  மூன்று வகைகளை பார்க்கிறேன்.
தேவன் மற்றும் சுஜாதா உண்டாக்கும்படியான நகையுணர்வு. அதில் தமாஷ், நக்கல், கேலி, கிண்டல், பகடி என வகைகளை தொட்டிருக்கிறார்.

விஷய செறிவுள்ள சில கட்டுரைகள் (எங்கிருந்து இந்த மனுஷன் படிக்கிறான்/ பார்க்கிறான்  எனும் பொறாமையூட்டுபவை உட்பட )

ஒன்றோ இரண்டோ, இயல்பான நெகிழும் உணர்வைத் தரும் கட்டுரைகள்.

சிலவற்றை தருகிறேன். ஆனால் இதை கட்டுரையின் வாசிப்பு தொடர்ச்சியில் படித்தால் இன்னும் சுகம். (படியுங்களேன்)

இலக்கிய உலகில் தற்போது நிலவும் ஒவ்வாமை மிகுந்துவிட்ட நல்ல குணங்களை சொல்லும்போது -
//அருட்பா எழுதிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை எதிர்த்து யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்து வள்ளலார் கோர்ட்டில் படி ஏற வேண்டிவந்தது. நாவலரைப் பற்றி ஏதும் பேசவோ எழுதவோ வேண்டாம் எனக் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பிட் நோட்டீஸ் யுத்தங்களின் மொழிநடையை இப்போது கைக்கொண்டால் அதற்கே ஏழெட்டு மானநஷ்ட வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.//

டெல்லியில் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு   செல்லும்போது அப்போது நிலவிய அரசியல் பிரமுகர்களின் எளிமையை பார்க்கவைக்கும் -

// அந்தக்கால மத்திய அரசான ஜனதா சர்க்காரின் துணைப் பிரதமர் சவுதிரி சரண்சிங்க் தினசரி வாக்கிங்க் போக என்  பாதையில் வருகிற வழக்கம். அந்த வயசர் அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எங்கே நகர்த்தலாம் என்று யோசித்தபடி மெல்ல நடக்கும்போது//

வழிப்பறி அதிகம் உள்ள லண்டன் பூங்காவை பற்றி சொல்லும்போது

//இரண்டு வருடம் முன்னால் லண்டன் கென்ஸிங்க்டன் பூங்காவில் ஓடக் கிளம்பியபோது, எதற்கும் அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடிவிட்டு வா என்று நண்பர் எச்சரித்து அனுப்பினார். பூங்காக்களில்   வழிப்பறி நடக்கிற மாநகரம் ஆதலால் இப்படி ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. இதைப் பின்பற்றி நான் பத்து அடிக்கு ஒருமுறை நின்று அரைவட்டம் சுழன்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டப்பிங் தெலுங்கு சினிமாவில் மந்திரவாதியின் உதவியாளன் போல் கேணத்தனமாக ஓட.. //

//உடுத்தியிருந்த எட்டு முழ வேட்டியைக் களைந்துவிட்டு ஜீன்ஸ¤க்கு மாறி, முரட்டு சாக்ஸையும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷ¥வையும் காலில் மாட்டுவதற்குள் தொப்பலாக நனைந்தாகி விட்டது. வேட்டி கட்டியே போகலாம்தான். வேட்டி கட்டிக் கொண்டு ஓடினால், பர்ஸைப் பறிகொடுத்து விட்டுக் கையறு நிலையில் ஓடுகிறதுபோல் இருக்கும்..//

பழைய படங்களில் மிகவும் சீரியஸான ஒரு விஷயம் இப்போது காமெடியாக மாறிவிடுவதை -

// நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நொடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க,  வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”.  அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி சாத்வீகமாக வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.//

சாதாரணமாக நாம் காணு விஷயங்களில் உள்ள நகைச்சுவையை

//அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன. ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -"இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.'...

இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன். "அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன்.//  என்பதை சொல்லும்போது உண்டாகும் புன்னகை அடுத்த வரியில் // என்று
ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்க்கும் பரிபக்குவம் //  என்கிறபோது புன்னகை அகலமாகிறது.

// கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. "டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். "பால்' என்பது "ஹால்' ஆகவும், "பல்' என்பது "ஹல்' ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து "ஹல்'லை உடைத்துவிடுவார்களோ?// என்று சொல்லி //   இது என்ன எல்லா மொழியிலும் பால் ? என்று அவரிடமே கேட்க அவர் ஆரம்பத்தை பத்திரிகை ஏஜென்சி எடுத்து நடத்தத்தான் முதலில் எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்க லாம்னு வீட்டுக்காரி ஒரே ஆடம் என்பதால் அவங்க விருப்பத்தையும் 'பால் ' னு அதில் சேர்த்திட்டேன் என்று சொன்னார் எனும்போது உங்களால் சிரிக்கலாம் இருக்க முடிகிறதா ?

தகவலைச் சொல்லும் ஒரு கட்டுரையில் //லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.//

பேசச்சொல்லி அழைப்பதை // லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.

பேசுவதற்காக அழைப்பதை // நாலு பலகையை இழுத்துப் போட்டு ஜமுக்காளம் விரித்து ஏழெட்டு நாற்காலியைப் பரத்தி, ஈசான்ய மூலையில் ஒரு மைக்கையும் பிரதிஷ்டை செய்கிறதை எங்கேயாவது பார்த்தால் நழுவி விடுகிற வழக்கம் எனக்கு. பேசக் கூப்பிட்டு மேடையேற்றிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு நடுக்கம்.//

சாதனைகள் என்ற பெயரிலான சேஷ்ட்டைகளை சொல்லும்போது

 // இவர்கள் போக, இன்னும் சில சாதனை வீரர்கள் என் பட்டியலில் உண்டு. மூக்கால் பட்டாணியை உருட்டிக் கொண்டு இருபத்தைந்து கிலோமீட்டர் போனவர் அவர்களில் ஒருவர். கட்டிலுக்குக் கீழே உருண்டு போன ஐந்து ரூபாய்க் காசை எடுக்கக் குனிந்து தேடினாலே மூச்சு வாங்குகிறது.  இருபத்தைந்து கிலோமீட்டர் உருட்டிப் போனால் அப்புறமும் அந்தப் பட்டாணி அதே சைஸில் இருக்குமா?//

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்லும் ஒருவர் விடாமல் கடிதம் எழுதுவதை

// உப்புப் பெறாத விஷயத்துக்காக வீட்டில் கோபித்துக் கொண்டு தேசாடனம் போன சொந்தக்காரர் ஒருவர் எழுதியது அதெல்லாம்.  ‘நான் சவுக்கியமில்லை. ஆலப்புழை கேளு நாயர் ஓட்டலில் காலை ஆகாரமாகப் புட்டும், சரியாக வேகாத கடலையும் சாப்பிட்டேன்’ என்று தடாரென்று பின்நவீனத்துவ இலக்கியம் மாதிரித் தொடங்கியவை பாதிக்கு மேல்.//

மின்னஞ்சல்கள் வந்த புதிதில் ஸ்பாம்கள் எனப்படும் தேவையற்ற குப்பைகள் மலிந்த (இது அநேகமாக பேஸ்புக்கின் மூதாதை என்று சொல்லலாம் ) நிலைமை பற்றி சொல்லும்போது

// கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்த பிற்பாடு  கார்டும், இண்லண்ட் லெட்டரும் வாங்கி வந்து கடிதம் எழுத உட்காருவதைவிட, கம்ப்யூட்டரைத் திறந்து நொடியில் ஈ மெயில் அனுப்புவதும் பெறுவதுமே சுலபமான வேலையாகப் போய்விட்டது.  இதிலும் சுவாரசியத்துக்குக்  குறைச்சல்  இல்லை.  நான் கேட்காமலேயே யார்யாரோ அமெரிக்காவிலிருந்து  மின்னஞ்சல் அனுப்பி, மிசிசிப்பியில் வீடுகட்ட எனக்கு சகாய வட்டியில் முப்பதாயிரம் டாலர் வழங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள். மிசிசிப்பியில் வீட்டைக் கட்டிவிட்டு, சென்னையில்   உத்தியோகம் பார்க்கத் தினம் எப்படி வந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘வாங்கிப் போடுப்பா, நான் இல்லே இப்போ’ என்று//

நாம் இப்போது பெரும்பாலும் கிண்டல் செய்யும் மலையாள உச்சரிப்பை பற்றி

// ஒரு தடவை ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை. சட்டைப் பையில் இருந்த மொபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன். "ஓண் இட்", பாதுகாப்புச் சோதனை செய்த காவலர் சொன்னார். ‘உன்னோடது தானா’ என்று விசாரிக்கிறார் போல் இருக்கிறது. உரிமையை எப்படி நிரூபிப்பது? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ. அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப "ஓண் இட்". ‘என்னோடது தான். என்னோடது மட்டும் தான்’. துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொ•பைலை வாங்கி, அதை இயக்கினார். திருப்தியோடு, “சரி போங்க” என்றார். சேட்டன் மலையாள உச்சரிப்பில் "on it" என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.//

சுஜாதாவின் வாசனை கசியும் வரிகளாக

// கொஞ்சம் என்னோடு யார்க்ஷயருக்கு வாருங்கள். விக்டோரியா ஓட்டல் என்ற புராதனமான தங்கும் விடுதியில் குளியலறையை வெளியில் இருந்து பாருங்கள். உள்ளே போகலாம்தான்.  ஒடுங்கலான அந்த அறைக்குள் ஒரு தினுசாக உடம்பை உடும்பாக வளைத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும். அதே போஸில் ஷவரைத் திறக்க வேண்டும். ஒருக்களித்தபடியே குளித்துவிட்டு சுளுக்குப் பிடிப்பதற்கு முன் வெளியே வர வேண்டும். ரைட் ராயலாக உள்ளே நுழைந்தால் எசகு பிசகாகச் சுவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு தீயணைப்புப் படையைக் கூப்பிட வேண்டியிருக்கும். அதுவும் அந்த ஊர்த் தீயணைப்புப் படையில் ஆறரை அடி உயரத்தில் கட்டு மஸ்தான பெண்மணிகள் அதிகம். நாலு சவரன் தங்கச் செயினை அழித்து ஒரு பவுன் மோதிரம் நாலு செய்கிறதுபோல், ஒரு தீயணைப்பு மாமியை அழித்தால் என் சைஸ் ஆசாமிகள் மூணு பேரைத் தோராயமாகச் செய்து நிறுத்தலாம். இந்த வீராங்கனைகள் இரண்டு பேர் வந்து பாத்ரூமிலிருந்து வெடுக்கென்று வெளியே பிடித்து இழுத்தால் இடது கை, வலது முழங்கால், தோள்பட்டை என்று தனித்தனியாக வந்து விழுந்து அப்புறம் உத்தேசமாக ஒட்டிச்சேர்க்க வேண்டியிருக்கும்.//

லண்டனில் ராணியின் அரண்மனைக்கு விருந்தினர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் அழைக்கப்படுவதை சொல்லும்போது

// இவர்கள் பொறுமையாகக் கியூவில் நின்று அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்தால், நாலு பன், ரெண்டு கேக், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் நாயர் கடையில் அவசரத்தில் போட்ட டீ மாதிரி ஒரு திரவ பதார்த்தம். அம்புட்டுத்தான்.//

// ஒரு தடவை இந்தியாவிலிருந்து போன பிரபல அரசியல் தலைவருக்கு அப்பளம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு, இங்கேயிருந்து அப்பளத்தை இறக்குமதி செய்தார்களாம். அப்பளக் கட்டில் ஒரு அப்பளத்துக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் மெல்லிசாக இலை நறுக்கை வைத்து அனுப்பியிருந்த பார்சலோடு, ‘எண்ணெயில் பொறிக்கவும்’ என்று ஒற்றை வரி செயல்முறை விளக்கம். ‘சும்மா ஜிகிடி வேலையாக’ ஒவ்வொரு இலை நறுக்குக்கும் மேலும் கீழும் வைத்துக் கட்டியிருந்த ‘வட்ட வட்ட மாவு வளையத்தை’ எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, நடுவிலிருந்த இலையை வெகு கவனமாக எடுத்துப் பொறித்ததாகக் கேள்வி!  இந்தக் தப்புக் கணக்கில் எத்தனை லட்சம்  எண்ணெயோடு போனது என்று தெரியவில்லை // என்று படிக்கும்போது வாஷிங்டனில் சாவி தெரிகிறார்.

தமிழ் ஊடகங்களையும் கேரளா ஊடகங்களையும் பிரித்து அடையாளம் காட்டும் சிரஞ்சீவி வரி -

// கோயம்புத்தூரில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ம் காங்கிரஸ் பற்றி பத்திரிகையின் முதல் பக்கம் முழுக்க  எழுதித் தள்ளியிருந்தார்கள். ‘பொலிட் பீரோவில் மூணில் ஒரு பாகம் மலையாளிகள்’. மாத்ருபூமிக்கு கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காவிட்டாலும் மலையாளிகள் எங்கே முன்னுக்கு வந்தாலும் குஷியாகச் செய்தி கொடுக்கும். தமிழ்ப் பத்திரிகைகள் இந்த  மாநாடு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை//

தகவல் கொசுறாக // இந்து பத்திரிகையின் இணையத் தளத்தில், மணிரத்தினம் மகன் பதினாறு வயது நந்தன் மாநாட்டுப் பந்தலில் செஞ்சட்டை வாலண்டியராக செயல்பட்டதோடு அவர் எழுதிய மார்க்சிய ஆய்வுப் புத்தகமும் விற்பனையில் இருந்ததாகச் சொன்னது நினைவு வர, குட்டப்பனிடம் தகவல் பரிமாறினேன். //

மலையாள இலக்கிய கர்த்தாக்களிடம் நிலவிய ஆரோக்கியமான அப்பிராய பேதங்கள் பற்றி
// எம்.டி எந்தக் காலத்திலோ எழுதியது ‘வானப்ரஸ்தம்’ சிறுகதை. தன் காதலியும் பழைய மாணவியுமான பெண்ணை கொல்லூர் மூகாம்பிகை கோவில் தரிசனத்துக்குப் போகும் ஆசிரியர் சந்திப்பது பற்றியது. இந்தக் கதையில் டாக்சியில் பெட்ரோல் நிரப்புவது, கொல்லூர் பிரயாண மார்க்கம் பற்றிய தகவல், மூகாம்பிகை கோவில் அர்ச்சகர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏகப்பட்டதைப் போட்டு எம்.டி ரொப்பி வச்சிருக்கார். எதுக்கு இதெல்லாம்? பத்மனாபன் எழுப்பும் கேள்வி இது.//

பள்ளிப் பாடப் புத்தகங்களில் நிலவும் தேவையற்ற அரசியல் பற்றி சொல்லும்போது

// பாடப் புத்தகத்திலே காந்தி பேரை நீக்கிட்டு கம்யூனிசத்தை நுழைச்சதாகவும், ஒரு மதத்தை உயர்த்திப் பிடிச்சு மற்றதை அம்போன்னு விட்டதாகவும் கேள்வி என்று பிடி கொடுக்காமல் சொன்னான் அவன். அது ஏன் ஏழாம் கிளாஸ் பாடத்தில் இப்படி? சரித்திரப் பாடத்தை அங்கே இங்கே கொஞ்சம் மாற்றி எழுதிப் படிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது பல மாநிலங்களிலும் வாடிக்கையாகிப் போன நிகழ்ச்சி. மார்க்சிய சாயத்தை இதற்கு வேணுமென்றே பூசியிருக்கிறார்கள் என்று குட்டப்பன் சொன்னபோது அவனுக்குள் பழைய காம்ரேட் ஒரு வினாடி தெரிந்தான் //.  இன்று ஒரிசாவில் பள்ளிப் புத்தகத்தில் உள்ள (தேவையற்ற ஒன்று )அரசியல் பற்றி சொல்பவர்கள் பலரின் முதுகு அழுக்கு இங்கே தெரிந்துவிடுகிறது.

ஜப்பானிய அதிகாரிகளை  உபசரிப்பது பற்றி - 

// ஜப்பானில் இருந்து ஒரே சீராக ஐந்து அடி உயரத்தில் ஓர் உயர்மட்டக் குழு வந்தது.  ஜப்பானியர்களைக் குனிந்து வணங்க வேண்டும். குனிந்தபடியே நம் விசிட்டிங்க் கார்டை அவர்கள் படிக்க வசதியாகத்  திருப்பி நீட்ட வேண்டும். அவர்கள் கார்ட் கொடுத்தால் கரிசனத்தோடு வாங்கி, பெயரை ஒருதடவை தப்பு இல்லாமல் உரக்கப் படிக்க வேண்டும். இதெல்லாம் ஜப்பானியக் கலாச்சாரத்தைப் போதிக்கும் கம்பெனிக் கட்டளைகள்.
முப்பது பேருக்கு முப்பது முறை இடுப்பை வளைத்துக் குனிந்து வணங்கி, விசிட்டிங்க் கார்ட் பரிமாற்றம் செய்து ஜாக்கிரதையாகப் பெயரை உச்சரித்து முடிப்பதற்குள் மதியச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி குனிந்தபடிக்கே அவர்களை லஞ்சுக்கு அழைத்துப் போனேன்.//

போகிற போக்கில் உபார்த்தோ ஈகோ பற்றி சொல்லி

 // ஏசு நாதர் ஒரு தடவை கூட சிரித்ததில்லை. அப்புறம் நாம் என்னத்துக்கு சிரிக்க வேணும் என்று வாதிடும் அந்த ஹோர்கா போல் எதிர்க் கட்சிகள் இடது முன்னணி செய்யும் நல்ல காரியம் எதையும் அங்கீகரிப்பதில்லை// ஒரு செய்தியை உதிர்க்கிறார்.

கோவிந்த் நிஹலானி கட்டுரை மிக செறிவானது. எவ்வளவு விஷயங்கள்.  
தமாஷாக ஆரம்பித்து // கோவிந்த், நான் உங்க கட்டிட வாசல்லே தான் நிக்கறேன். கறுப்புச் சட்டை. நான் முதல் மாடி ஜன்னல் பக்கம் நிக்கறேன். தலையைத் தூக்கிப் பாருங்க இரா.இராவாகிய நான் முதல் மாடியைக் கவனித்துப் பார்க்க, துணி உலர்த்திக் கொண்டிருந்த குஜராத்திக் கிழவியம்மா முந்தானையை அவசரமாக சரிசெய்து கொள்கிறாள். காலம் கெட்டுக் கிடக்கு. வயசானாலும் பாதுகாப்பு இல்லாத பட்டிணம் இது.// என்று கிளம்பி நிறைய சொல்கிறது.

பிரம்மாண்டமான தயாரிப்பான ஆட்டன்பரோவின் காந்தி ஆங்கிலப் படத்துக்கு செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றி, ஷ்யாம் பெனகலின் வலதுகை அவர் -  கொலாட்கர் பற்றிய கௌரியின் ‘கருப்புக் குதிரை’ நாடகம் பற்றிப் பேச்சு கடந்து போகிறது. - கொலாட்கரின் ஜெஜூரி, காலாகோடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து - எல்குஞ்ச்வரோட பாபுலர் டிராமா வாதே சிராபந்தியை நீங்க ஏன் திரைப்படமாக்கலே? -லோர்காவின் நாடகமான ஹவுஸ் ஓஃப் பெர்னார்டா ஆல்பாவை, ருக்மாவதி கி ஹவேலி என்று இந்திப் படமாகச் செய்த அனுபவம் பற்றி - புரசீனியம் தியேட்டரை காமிராவில் அடைச்சா கொஞ்சம் இரட்டைப் பரிமாணம் தட்டுப் படாதா - பீஷ்ம சஹானியின் இந்தி நாவலான தமஸ் கோவிந்த் நிஹலானி கைவண்ணத்தில் தூர்தர்ஷன் சீரியலாக வந்தபோது // என்றெல்லாம் ஏகப்பட்டதை சொல்கிறார்.

வெளிநாடு ஒன்றில் இலக்கிய கூட்டம் ஒன்றைப் பார்க்க சென்றபோது அறிமுகம் செய்திகொண்டு பேசும்போது அங்கே நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை சொல்லி

//ஆனால், நம்ம ஊர் வழக்கம் வேறு. எழுத்தை தொழிலாக வைத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டே வாரக் கடைசியில், ராத்திரி கண் முழித்து பெண்டாட்டி படுத்துக் கொள்ளச் சொல்லி படுக்கையில் இடம் விட்டு நகர்ந்தாலும் பொருட்படுத்தாமல் டெட்லைன் காப்பாற்ற எழுதி அனுப்பி சன்மானம் வாங்குகிறது அது.  வீட்டுக்காரருக்கு இந்த வளமுறையை கோடி காண்பிப்பதில் அடுத்த ஐந்து நிமிடம் கடந்து போனது. போகட்டும். தமிழ் எழுத்து பற்றி அவரும் அறியட்டும்.//

இறுதியாக ஒன்றை சொல்லி முடித்து விடுகிறேன் . மறதி பற்றி ஒரு கட்டுரையில் உடலும் மனமும் நைந்து போய் தான் என்ன செய்கிறோம் என்பதை பற்றிய பிரஞை இல்லாமல் இருப்பவர்கள் (இந்த ஜானரில் ந்யூறான் கொலைகள் என்று ஒரு சிறுகதையை  ரமேஷ் கல்யாண் என்பவர் எழுதி இருக்கிறார் - (அதென்னமோ நான் என்று சொல்லிக்கொள்ள கூச்சம் ))

// இவரும் அப்படித்தான் எப்போதோ இறந்து போன யார் யாரோ பக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களோடு பேச முயற்சி செய்தபடி குளியல் அறைக்குள் போனது ஒரு நடுப்பகலில். இல்லாத யாரையோ குளிக்கச் சொல்லி அவர் திறந்தது வென்னீர் ஊற்றாக பீறிடும் ஷவரை. அதன் கீழே நின்றபடிக்கு நிறுத்த முயன்று தோற்றுப்போனவர் மேல் கொதிக்கக் கொதிக்க சுடுநீர் விழுந்து கொண்டிருந்தது கிட்டத்தட்ட மாலை மயங்கும் நேரம் வரை. தேடி வந்த யாரோ குளியல் அறையில் பார்த்தபோது முக்காலே மூணு பாகம் வெந்து போயிருந்தார். வலியும் வாதனையுமான இருப்பும் இறப்பும் அவருக்கு என்று எழுதி வைத்திருந்தது// .

இப்படி அல்ஷிமர், பார்க்கின்ஸன் மறதி நோய் உள்ள மோகன்லால் நடித்த  சினிமா பற்றி சொல்லும்போது (அருமையான படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். மழையில் நனைந்தபடி நீளும் மோகன்லாலின் கை, உண்ணியப்பம் உண்ணியப்பம் என்ற அவர் குரல் ..இதோ இப்போதும் எனக்கு கேட்கிறது )

// தன்வந்தரம் (*) படத்தில் மோகன்லால் இணைவிழைந்து மனைவியோடு படுக்கையில் இருக்கும்போது பாதியில் எல்லாம் மறந்து போய், வெளியில் நடக்கிற ஒரு அற்புதமான காட்சியைப் படமாக்கி, ரசிகர்கள் கோபத்துக்குப் பயந்து சினிமாவில் சேர்க்கவில்லை.// என்ற செய்தியை சொல்லி விட்டு கீழ்க்கண்டவாறு முடியும் வரிகளை படித்தபோது மனம் கனம் கொண்டது.

// இதை நினைவு கூர்ந்தபடி படம் பார்த்துப் படுக்கையில் விழுந்தபோது நாகேஷ் உயிரோடு இருந்தார். காலை விடிந்ததும் அவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்து விட்டார். எப்போது இறந்தார் என்று அவரை நெருக்கமாக அறிந்த நண்பரைக் கேட்டேன். கன்னடத் திரைப்படம் எதையோ டிவிடியில் பார்த்தபடி உயிர் போனதாகச் சொன்னார். அல்ஷிமர், பார்க்கின்ஸன் மூலம் மரணம் போல் இருந்திருக்காது அது. //

கட்டுரையில் இரண்டு கவனித்தேன்.

அரண்மனை விருந்து கட்டுரையில் 'தலநகர்' என்று இருக்கிறது. தலை நகர் எழுத்து பிழையா அல்லது 'ஸ்தல நகர் ' என்ற பொருளிலா ?

மோகன்லால் படம் தன்வந்திரம் (*) என்று இருக்கிறது. அது தன்மாத்திரா அல்லவா ? (வெகு சில மலையாள படங்களே பார்த்தவன் நான். (இரா) முருகனுக்கே தினைமாவா என்று கேட்காதீர் ? சந்தேகம். கேட்டுவிட்டேன்.'



சற்றே நகுக
இரா முருகன் தினமணிக் கதிர் கட்டுரைகள்

தலைப்புக்கு முழு நியாயம் செய்யும் வகையில் படிக்கும்போது பெரும்பாலும்.புன்னகையை சிரிப்பை அல்லது உள்ளூர 'க்ளுக்' குகளை உண்டாக்கும் கட்டுரைகளே. அலுப்பூட்டும் மேடைத் துணுக்குகள் அல்லது பட்டிமன்ற அசட்டு ஜோக்குகள் போல் இல்லாமல் தனது நீண்ட விரிந்த பயண மற்றும் வாசிப்பு அனுபவத்தை ஒட்டி அமைந்தவை என்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று எதற்கெடுத்தாலும் சிடுமூஞ்சித் தனமும், அலுப்போட்டும் அற்ப விமர்சனங்களும், ம பி விவாதங்களும், அப்படி வெட்டிப் போற்றவற்றை கொலாஜ் போல ஒட்டி மறு உருவாக்கம் கொள்ளும் கீழ்மைகளும் மலிந்த சமயத்தில் ( சமூக ஊடகங்கள் புண்ணியத்தில்) - சற்று மனம் விட்டு புன்னகைக்க வைக்கின்றன இவை.

என்னுடைய ஆசிரியரும் எழுத்தாளருமான வே. சபாநாயகம் ஒரு முறை பேசும்போது நகைச்சுவை எழுதுவது மிகவும் கடினம். அது இயல்பாக வரவேண்டும். எழுதும்போது பரிச்சயமான ஒரு காட்சியை செய்தியை சொல்லி உறுத்தாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்று ஜராசுவின் "அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது" என்பதை குறிப்பிடுவார். இரா முருகனுக்கு அவை கைவந்திருப்பதை இதில் சுவைக்கலாம்.

கட்டுரைத் தொகுப்பில் மூன்று வகைகளை பார்க்கிறேன்.
தேவன் மற்றும் சுஜாதா உண்டாக்கும்படியான நகையுணர்வு. அதில் தமாஷ், நக்கல், கேலி, கிண்டல், பகடி என வகைகளை தொட்டிருக்கிறார்.

விஷய செறிவுள்ள சில கட்டுரைகள் (எங்கிருந்து இந்த மனுஷன் படிக்கிறான்/ பார்க்கிறான் எனும் பொறாமையூட்டுபவை உட்பட )

ஒன்றோ இரண்டோ, இயல்பான நெகிழும் உணர்வைத் தரும் கட்டுரைகள்.

சிலவற்றை தருகிறேன். ஆனால் இதை கட்டுரையின் வாசிப்பு தொடர்ச்சியில் படித்தால் இன்னும் சுகம். (படியுங்களேன்)

இலக்கிய உலகில் தற்போது நிலவும் ஒவ்வாமை மிகுந்துவிட்ட நல்ல குணங்களை சொல்லும்போது -
//அருட்பா எழுதிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை எதிர்த்து யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்து வள்ளலார் கோர்ட்டில் படி ஏற வேண்டிவந்தது. நாவலரைப் பற்றி ஏதும் பேசவோ எழுதவோ வேண்டாம் எனக் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பிட் நோட்டீஸ் யுத்தங்களின் மொழிநடையை இப்போது கைக்கொண்டால் அதற்கே ஏழெட்டு மானநஷ்ட வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.//

டெல்லியில் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது அப்போது நிலவிய அரசியல் பிரமுகர்களின் எளிமையை பார்க்கவைக்கும் -

// அந்தக்கால மத்திய அரசான ஜனதா சர்க்காரின் துணைப் பிரதமர் சவுதிரி சரண்சிங்க் தினசரி வாக்கிங்க் போக என் பாதையில் வருகிற வழக்கம். அந்த வயசர் அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எங்கே நகர்த்தலாம் என்று யோசித்தபடி மெல்ல நடக்கும்போது//

வழிப்பறி அதிகம் உள்ள லண்டன் பூங்காவை பற்றி சொல்லும்போது

//இரண்டு வருடம் முன்னால் லண்டன் கென்ஸிங்க்டன் பூங்காவில் ஓடக் கிளம்பியபோது, எதற்கும் அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடிவிட்டு வா என்று நண்பர் எச்சரித்து அனுப்பினார். பூங்காக்களில் வழிப்பறி நடக்கிற மாநகரம் ஆதலால் இப்படி ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. இதைப் பின்பற்றி நான் பத்து அடிக்கு ஒருமுறை நின்று அரைவட்டம் சுழன்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டப்பிங் தெலுங்கு சினிமாவில் மந்திரவாதியின் உதவியாளன் போல் கேணத்தனமாக ஓட.. //

//உடுத்தியிருந்த எட்டு முழ வேட்டியைக் களைந்துவிட்டு ஜீன்ஸ¤க்கு மாறி, முரட்டு சாக்ஸையும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷ¥வையும் காலில் மாட்டுவதற்குள் தொப்பலாக நனைந்தாகி விட்டது. வேட்டி கட்டியே போகலாம்தான். வேட்டி கட்டிக் கொண்டு ஓடினால், பர்ஸைப் பறிகொடுத்து விட்டுக் கையறு நிலையில் ஓடுகிறதுபோல் இருக்கும்..//

பழைய படங்களில் மிகவும் சீரியஸான ஒரு விஷயம் இப்போது காமெடியாக மாறிவிடுவதை -

// நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நொடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க, வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”. அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி சாத்வீகமாக வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.//

சாதாரணமாக நாம் காணு விஷயங்களில் உள்ள நகைச்சுவையை

//அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன. ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -"இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.'...

இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன். "அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன்.// என்பதை சொல்லும்போது உண்டாகும் புன்னகை அடுத்த வரியில் // என்று
ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்க்கும் பரிபக்குவம் // என்கிறபோது புன்னகை அகலமாகிறது.

// கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. "டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். "பால்' என்பது "ஹால்' ஆகவும், "பல்' என்பது "ஹல்' ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து "ஹல்'லை உடைத்துவிடுவார்களோ?// என்று சொல்லி // இது என்ன எல்லா மொழியிலும் பால் ? என்று அவரிடமே கேட்க அவர் ஆரம்பத்தை பத்திரிகை ஏஜென்சி எடுத்து நடத்தத்தான் முதலில் எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்க லாம்னு வீட்டுக்காரி ஒரே ஆடம் என்பதால் அவங்க விருப்பத்தையும் 'பால் ' னு அதில் சேர்த்திட்டேன் என்று சொன்னார் எனும்போது உங்களால் சிரிக்கலாம் இருக்க முடிகிறதா ?

தகவலைச் சொல்லும் ஒரு கட்டுரையில் //லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.//

பேசச்சொல்லி அழைப்பதை // லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.

பேசுவதற்காக அழைப்பதை // நாலு பலகையை இழுத்துப் போட்டு ஜமுக்காளம் விரித்து ஏழெட்டு நாற்காலியைப் பரத்தி, ஈசான்ய மூலையில் ஒரு மைக்கையும் பிரதிஷ்டை செய்கிறதை எங்கேயாவது பார்த்தால் நழுவி விடுகிற வழக்கம் எனக்கு. பேசக் கூப்பிட்டு மேடையேற்றிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு நடுக்கம்.//

சாதனைகள் என்ற பெயரிலான சேஷ்ட்டைகளை சொல்லும்போது

// இவர்கள் போக, இன்னும் சில சாதனை வீரர்கள் என் பட்டியலில் உண்டு. மூக்கால் பட்டாணியை உருட்டிக் கொண்டு இருபத்தைந்து கிலோமீட்டர் போனவர் அவர்களில் ஒருவர். கட்டிலுக்குக் கீழே உருண்டு போன ஐந்து ரூபாய்க் காசை எடுக்கக் குனிந்து தேடினாலே மூச்சு வாங்குகிறது. இருபத்தைந்து கிலோமீட்டர் உருட்டிப் போனால் அப்புறமும் அந்தப் பட்டாணி அதே சைஸில் இருக்குமா?//

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்லும் ஒருவர் விடாமல் கடிதம் எழுதுவதை

// உப்புப் பெறாத விஷயத்துக்காக வீட்டில் கோபித்துக் கொண்டு தேசாடனம் போன சொந்தக்காரர் ஒருவர் எழுதியது அதெல்லாம். ‘நான் சவுக்கியமில்லை. ஆலப்புழை கேளு நாயர் ஓட்டலில் காலை ஆகாரமாகப் புட்டும், சரியாக வேகாத கடலையும் சாப்பிட்டேன்’ என்று தடாரென்று பின்நவீனத்துவ இலக்கியம் மாதிரித் தொடங்கியவை பாதிக்கு மேல்.//

மின்னஞ்சல்கள் வந்த புதிதில் ஸ்பாம்கள் எனப்படும் தேவையற்ற குப்பைகள் மலிந்த (இது அநேகமாக பேஸ்புக்கின் மூதாதை என்று சொல்லலாம் ) நிலைமை பற்றி சொல்லும்போது

// கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்த பிற்பாடு கார்டும், இண்லண்ட் லெட்டரும் வாங்கி வந்து கடிதம் எழுத உட்காருவதைவிட, கம்ப்யூட்டரைத் திறந்து நொடியில் ஈ மெயில் அனுப்புவதும் பெறுவதுமே சுலபமான வேலையாகப் போய்விட்டது. இதிலும் சுவாரசியத்துக்குக் குறைச்சல் இல்லை. நான் கேட்காமலேயே யார்யாரோ அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி, மிசிசிப்பியில் வீடுகட்ட எனக்கு சகாய வட்டியில் முப்பதாயிரம் டாலர் வழங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள். மிசிசிப்பியில் வீட்டைக் கட்டிவிட்டு, சென்னையில் உத்தியோகம் பார்க்கத் தினம் எப்படி வந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘வாங்கிப் போடுப்பா, நான் இல்லே இப்போ’ என்று//

நாம் இப்போது பெரும்பாலும் கிண்டல் செய்யும் மலையாள உச்சரிப்பை பற்றி

// ஒரு தடவை ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை. சட்டைப் பையில் இருந்த மொபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன். "ஓண் இட்", பாதுகாப்புச் சோதனை செய்த காவலர் சொன்னார். ‘உன்னோடது தானா’ என்று விசாரிக்கிறார் போல் இருக்கிறது. உரிமையை எப்படி நிரூபிப்பது? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ. அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப "ஓண் இட்". ‘என்னோடது தான். என்னோடது மட்டும் தான்’. துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொ•பைலை வாங்கி, அதை இயக்கினார். திருப்தியோடு, “சரி போங்க” என்றார். சேட்டன் மலையாள உச்சரிப்பில் "on it" என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.//

சுஜாதாவின் வாசனை கசியும் வரிகளாக

// கொஞ்சம் என்னோடு யார்க்ஷயருக்கு வாருங்கள். விக்டோரியா ஓட்டல் என்ற புராதனமான தங்கும் விடுதியில் குளியலறையை வெளியில் இருந்து பாருங்கள். உள்ளே போகலாம்தான். ஒடுங்கலான அந்த அறைக்குள் ஒரு தினுசாக உடம்பை உடும்பாக வளைத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும். அதே போஸில் ஷவரைத் திறக்க வேண்டும். ஒருக்களித்தபடியே குளித்துவிட்டு சுளுக்குப் பிடிப்பதற்கு முன் வெளியே வர வேண்டும். ரைட் ராயலாக உள்ளே நுழைந்தால் எசகு பிசகாகச் சுவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு தீயணைப்புப் படையைக் கூப்பிட வேண்டியிருக்கும். அதுவும் அந்த ஊர்த் தீயணைப்புப் படையில் ஆறரை அடி உயரத்தில் கட்டு மஸ்தான பெண்மணிகள் அதிகம். நாலு சவரன் தங்கச் செயினை அழித்து ஒரு பவுன் மோதிரம் நாலு செய்கிறதுபோல், ஒரு தீயணைப்பு மாமியை அழித்தால் என் சைஸ் ஆசாமிகள் மூணு பேரைத் தோராயமாகச் செய்து நிறுத்தலாம். இந்த வீராங்கனைகள் இரண்டு பேர் வந்து பாத்ரூமிலிருந்து வெடுக்கென்று வெளியே பிடித்து இழுத்தால் இடது கை, வலது முழங்கால், தோள்பட்டை என்று தனித்தனியாக வந்து விழுந்து அப்புறம் உத்தேசமாக ஒட்டிச்சேர்க்க வேண்டியிருக்கும்.//

லண்டனில் ராணியின் அரண்மனைக்கு விருந்தினர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் அழைக்கப்படுவதை சொல்லும்போது

// இவர்கள் பொறுமையாகக் கியூவில் நின்று அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்தால், நாலு பன், ரெண்டு கேக், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் நாயர் கடையில் அவசரத்தில் போட்ட டீ மாதிரி ஒரு திரவ பதார்த்தம். அம்புட்டுத்தான்.//

// ஒரு தடவை இந்தியாவிலிருந்து போன பிரபல அரசியல் தலைவருக்கு அப்பளம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு, இங்கேயிருந்து அப்பளத்தை இறக்குமதி செய்தார்களாம். அப்பளக் கட்டில் ஒரு அப்பளத்துக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் மெல்லிசாக இலை நறுக்கை வைத்து அனுப்பியிருந்த பார்சலோடு, ‘எண்ணெயில் பொறிக்கவும்’ என்று ஒற்றை வரி செயல்முறை விளக்கம். ‘சும்மா ஜிகிடி வேலையாக’ ஒவ்வொரு இலை நறுக்குக்கும் மேலும் கீழும் வைத்துக் கட்டியிருந்த ‘வட்ட வட்ட மாவு வளையத்தை’ எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, நடுவிலிருந்த இலையை வெகு கவனமாக எடுத்துப் பொறித்ததாகக் கேள்வி! இந்தக் தப்புக் கணக்கில் எத்தனை லட்சம் எண்ணெயோடு போனது என்று தெரியவில்லை // என்று படிக்கும்போது வாஷிங்டனில் சாவி தெரிகிறார்.

தமிழ் ஊடகங்களையும் கேரளா ஊடகங்களையும் பிரித்து அடையாளம் காட்டும் சிரஞ்சீவி வரி -

// கோயம்புத்தூரில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ம் காங்கிரஸ் பற்றி பத்திரிகையின் முதல் பக்கம் முழுக்க எழுதித் தள்ளியிருந்தார்கள். ‘பொலிட் பீரோவில் மூணில் ஒரு பாகம் மலையாளிகள்’. மாத்ருபூமிக்கு கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காவிட்டாலும் மலையாளிகள் எங்கே முன்னுக்கு வந்தாலும் குஷியாகச் செய்தி கொடுக்கும். தமிழ்ப் பத்திரிகைகள் இந்த மாநாடு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை//

தகவல் கொசுறாக // இந்து பத்திரிகையின் இணையத் தளத்தில், மணிரத்தினம் மகன் பதினாறு வயது நந்தன் மாநாட்டுப் பந்தலில் செஞ்சட்டை வாலண்டியராக செயல்பட்டதோடு அவர் எழுதிய மார்க்சிய ஆய்வுப் புத்தகமும் விற்பனையில் இருந்ததாகச் சொன்னது நினைவு வர, குட்டப்பனிடம் தகவல் பரிமாறினேன். //

மலையாள இலக்கிய கர்த்தாக்களிடம் நிலவிய ஆரோக்கியமான அப்பிராய பேதங்கள் பற்றி
// எம்.டி எந்தக் காலத்திலோ எழுதியது ‘வானப்ரஸ்தம்’ சிறுகதை. தன் காதலியும் பழைய மாணவியுமான பெண்ணை கொல்லூர் மூகாம்பிகை கோவில் தரிசனத்துக்குப் போகும் ஆசிரியர் சந்திப்பது பற்றியது. இந்தக் கதையில் டாக்சியில் பெட்ரோல் நிரப்புவது, கொல்லூர் பிரயாண மார்க்கம் பற்றிய தகவல், மூகாம்பிகை கோவில் அர்ச்சகர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏகப்பட்டதைப் போட்டு எம்.டி ரொப்பி வச்சிருக்கார். எதுக்கு இதெல்லாம்? பத்மனாபன் எழுப்பும் கேள்வி இது.//

பள்ளிப் பாடப் புத்தகங்களில் நிலவும் தேவையற்ற அரசியல் பற்றி சொல்லும்போது

// பாடப் புத்தகத்திலே காந்தி பேரை நீக்கிட்டு கம்யூனிசத்தை நுழைச்சதாகவும், ஒரு மதத்தை உயர்த்திப் பிடிச்சு மற்றதை அம்போன்னு விட்டதாகவும் கேள்வி என்று பிடி கொடுக்காமல் சொன்னான் அவன். அது ஏன் ஏழாம் கிளாஸ் பாடத்தில் இப்படி? சரித்திரப் பாடத்தை அங்கே இங்கே கொஞ்சம் மாற்றி எழுதிப் படிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது பல மாநிலங்களிலும் வாடிக்கையாகிப் போன நிகழ்ச்சி. மார்க்சிய சாயத்தை இதற்கு வேணுமென்றே பூசியிருக்கிறார்கள் என்று குட்டப்பன் சொன்னபோது அவனுக்குள் பழைய காம்ரேட் ஒரு வினாடி தெரிந்தான் //. இன்று ஒரிசாவில் பள்ளிப் புத்தகத்தில் உள்ள (தேவையற்ற ஒன்று )அரசியல் பற்றி சொல்பவர்கள் பலரின் முதுகு அழுக்கு இங்கே தெரிந்துவிடுகிறது.

ஜப்பானிய அதிகாரிகளை உபசரிப்பது பற்றி -

// ஜப்பானில் இருந்து ஒரே சீராக ஐந்து அடி உயரத்தில் ஓர் உயர்மட்டக் குழு வந்தது. ஜப்பானியர்களைக் குனிந்து வணங்க வேண்டும். குனிந்தபடியே நம் விசிட்டிங்க் கார்டை அவர்கள் படிக்க வசதியாகத் திருப்பி நீட்ட வேண்டும். அவர்கள் கார்ட் கொடுத்தால் கரிசனத்தோடு வாங்கி, பெயரை ஒருதடவை தப்பு இல்லாமல் உரக்கப் படிக்க வேண்டும். இதெல்லாம் ஜப்பானியக் கலாச்சாரத்தைப் போதிக்கும் கம்பெனிக் கட்டளைகள்.
முப்பது பேருக்கு முப்பது முறை இடுப்பை வளைத்துக் குனிந்து வணங்கி, விசிட்டிங்க் கார்ட் பரிமாற்றம் செய்து ஜாக்கிரதையாகப் பெயரை உச்சரித்து முடிப்பதற்குள் மதியச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி குனிந்தபடிக்கே அவர்களை லஞ்சுக்கு அழைத்துப் போனேன்.//

போகிற போக்கில் உபார்த்தோ ஈகோ பற்றி சொல்லி

// ஏசு நாதர் ஒரு தடவை கூட சிரித்ததில்லை. அப்புறம் நாம் என்னத்துக்கு சிரிக்க வேணும் என்று வாதிடும் அந்த ஹோர்கா போல் எதிர்க் கட்சிகள் இடது முன்னணி செய்யும் நல்ல காரியம் எதையும் அங்கீகரிப்பதில்லை// ஒரு செய்தியை உதிர்க்கிறார்.

கோவிந்த் நிஹலானி கட்டுரை மிக செறிவானது. எவ்வளவு விஷயங்கள்.
தமாஷாக ஆரம்பித்து // கோவிந்த், நான் உங்க கட்டிட வாசல்லே தான் நிக்கறேன். கறுப்புச் சட்டை. நான் முதல் மாடி ஜன்னல் பக்கம் நிக்கறேன். தலையைத் தூக்கிப் பாருங்க இரா.இராவாகிய நான் முதல் மாடியைக் கவனித்துப் பார்க்க, துணி உலர்த்திக் கொண்டிருந்த குஜராத்திக் கிழவியம்மா முந்தானையை அவசரமாக சரிசெய்து கொள்கிறாள். காலம் கெட்டுக் கிடக்கு. வயசானாலும் பாதுகாப்பு இல்லாத பட்டிணம் இது.// என்று கிளம்பி நிறைய சொல்கிறது.

பிரம்மாண்டமான தயாரிப்பான ஆட்டன்பரோவின் காந்தி ஆங்கிலப் படத்துக்கு செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றி, ஷ்யாம் பெனகலின் வலதுகை அவர் - கொலாட்கர் பற்றிய கௌரியின் ‘கருப்புக் குதிரை’ நாடகம் பற்றிப் பேச்சு கடந்து போகிறது. - கொலாட்கரின் ஜெஜூரி, காலாகோடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து - எல்குஞ்ச்வரோட பாபுலர் டிராமா வாதே சிராபந்தியை நீங்க ஏன் திரைப்படமாக்கலே? -லோர்காவின் நாடகமான ஹவுஸ் ஓஃப் பெர்னார்டா ஆல்பாவை, ருக்மாவதி கி ஹவேலி என்று இந்திப் படமாகச் செய்த அனுபவம் பற்றி - புரசீனியம் தியேட்டரை காமிராவில் அடைச்சா கொஞ்சம் இரட்டைப் பரிமாணம் தட்டுப் படாதா - பீஷ்ம சஹானியின் இந்தி நாவலான தமஸ் கோவிந்த் நிஹலானி கைவண்ணத்தில் தூர்தர்ஷன் சீரியலாக வந்தபோது // என்றெல்லாம் ஏகப்பட்டதை சொல்கிறார்.

வெளிநாடு ஒன்றில் இலக்கிய கூட்டம் ஒன்றைப் பார்க்க சென்றபோது அறிமுகம் செய்திகொண்டு பேசும்போது அங்கே நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை சொல்லி

//ஆனால், நம்ம ஊர் வழக்கம் வேறு. எழுத்தை தொழிலாக வைத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டே வாரக் கடைசியில், ராத்திரி கண் முழித்து பெண்டாட்டி படுத்துக் கொள்ளச் சொல்லி படுக்கையில் இடம் விட்டு நகர்ந்தாலும் பொருட்படுத்தாமல் டெட்லைன் காப்பாற்ற எழுதி அனுப்பி சன்மானம் வாங்குகிறது அது. வீட்டுக்காரருக்கு இந்த வளமுறையை கோடி காண்பிப்பதில் அடுத்த ஐந்து நிமிடம் கடந்து போனது. போகட்டும். தமிழ் எழுத்து பற்றி அவரும் அறியட்டும்.//

இறுதியாக ஒன்றை சொல்லி முடித்து விடுகிறேன் . மறதி பற்றி ஒரு கட்டுரையில் உடலும் மனமும் நைந்து போய் தான் என்ன செய்கிறோம் என்பதை பற்றிய பிரஞை இல்லாமல் இருப்பவர்கள் (இந்த ஜானரில் ந்யூறான் கொலைகள் என்று ஒரு சிறுகதையை ரமேஷ் கல்யாண் என்பவர் எழுதி இருக்கிறார் - (அதென்னமோ நான் என்று சொல்லிக்கொள்ள கூச்சம் ))

// இவரும் அப்படித்தான் எப்போதோ இறந்து போன யார் யாரோ பக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களோடு பேச முயற்சி செய்தபடி குளியல் அறைக்குள் போனது ஒரு நடுப்பகலில். இல்லாத யாரையோ குளிக்கச் சொல்லி அவர் திறந்தது வென்னீர் ஊற்றாக பீறிடும் ஷவரை. அதன் கீழே நின்றபடிக்கு நிறுத்த முயன்று தோற்றுப்போனவர் மேல் கொதிக்கக் கொதிக்க சுடுநீர் விழுந்து கொண்டிருந்தது கிட்டத்தட்ட மாலை மயங்கும் நேரம் வரை. தேடி வந்த யாரோ குளியல் அறையில் பார்த்தபோது முக்காலே மூணு பாகம் வெந்து போயிருந்தார். வலியும் வாதனையுமான இருப்பும் இறப்பும் அவருக்கு என்று எழுதி வைத்திருந்தது// .

இப்படி அல்ஷிமர், பார்க்கின்ஸன் மறதி நோய் உள்ள மோகன்லால் நடித்த சினிமா பற்றி சொல்லும்போது (அருமையான படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். மழையில் நனைந்தபடி நீளும் மோகன்லாலின் கை, உண்ணியப்பம் உண்ணியப்பம் என்ற அவர் குரல் ..இதோ இப்போதும் எனக்கு கேட்கிறது )

// தன்வந்தரம் (*) படத்தில் மோகன்லால் இணைவிழைந்து மனைவியோடு படுக்கையில் இருக்கும்போது பாதியில் எல்லாம் மறந்து போய், வெளியில் நடக்கிற ஒரு அற்புதமான காட்சியைப் படமாக்கி, ரசிகர்கள் கோபத்துக்குப் பயந்து சினிமாவில் சேர்க்கவில்லை.// என்ற செய்தியை சொல்லி விட்டு கீழ்க்கண்டவாறு முடியும் வரிகளை படித்தபோது மனம் கனம் கொண்டது.

// இதை நினைவு கூர்ந்தபடி படம் பார்த்துப் படுக்கையில் விழுந்தபோது நாகேஷ் உயிரோடு இருந்தார். காலை விடிந்ததும் அவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்து விட்டார். எப்போது இறந்தார் என்று அவரை நெருக்கமாக அறிந்த நண்பரைக் கேட்டேன். கன்னடத் திரைப்படம் எதையோ டிவிடியில் பார்த்தபடி உயிர் போனதாகச் சொன்னார். அல்ஷிமர், பார்க்கின்ஸன் மூலம் மரணம் போல் இருந்திருக்காது அது. //

கட்டுரையில் இரண்டு கவனித்தேன்.

அரண்மனை விருந்து கட்டுரையில் 'தலநகர்' என்று இருக்கிறது. தலை நகர் எழுத்து பிழையா அல்லது 'ஸ்தல நகர் ' என்ற பொருளிலா ?

மோகன்லால் படம் தன்வந்திரம் (*) என்று இருக்கிறது. அது தன்மாத்திரா அல்லவா ? (வெகு சில மலையாள படங்களே பார்த்தவன் நான். (இரா) முருகனுக்கே தினைமாவா என்று கேட்காதீர் ? சந்தேகம். கேட்டுவிட்டேன்.

No comments:

Post a Comment

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...